சனி, 19 நவம்பர், 2011

மனங்களின் ஊசல்கள்

நூல் : மனங்களின் ஊசல்கள்
ஆசிரியர் : தாரிக்கா  மர்சூக்
நூல்ஆய்வு : கலைமகள்  ஹிதாயா  றிஸ்வி.


இலங்கையின்  கலை இலக்கிய  பூங்காவில் நறுமணம் வீசும்  கலைப் பூக்கள் மிக...  மிக..அரிதாக  பூக்கும்  இடம்  தான் குருநாகல்  பிரதேசம் .
இந்த இடத்தில் தென்றலோடு  கலந்து நறுமணம்  வீசும் ஒரு சில  பூக்களில் ஒன்று தான் இந்த தாரிக்கா  மர்சூக்.
கவிதை,கதை  என்று எம் மத்தியில் பல நூல்கள் பூத்தாலும் கூட கட்டுரை நூல்கள்  பூப்பது மிகக் குறைவானதே ஆகும் .ஏழு  வயதில் கவிபாடிய சுப்பிரமணிய பாரதியை ஞானக் கண்ணாற் பார்க்கும் நம்மில் சிலர், ஏனோ இன்று பதினைந்து - இருபது வயதுகளில் கலை இலக்கியம் படைக்கும் எம் யுவதிகளை வாலிபர்களை, ஊனக் கண்ணாற் பார்ப்பது காணக் கூடிய செயலே.
பேரும் புகழும் வரவேண்டு மென்று எழுதுகின்றார்களே என்று எம் மத்தியில் தரமான கலையுள்ளங்களை வளர விடாது தடுக்கும் இவர்கள் ஏன்  சமூகத்துக்குச் செய்யும் தூய்மையான பல  காரியங்களுள் இலக்கியம்  படைப்பதுவும்  ஒன்றாகும் என்பதை மறந்து  விடுகிறார்கள்
இங்கே தாரிக்கா இலக்கியமே இலட்சியமாய் இலட்சியமே  இலக்கியமாய்  கருதுகின்றார். தனது நெஞ்சக் கனலில் நீராகி  தன்னைத் தானே நீராக்கி கொண்ட அனுபவத்தை தான் "மனங்களின் ஊசல்கள் "மூ லமாக உணர் வோமியமாக்கித் தந்து  உள்ளார் .
விரைந்து  செல்லும்  உலகத்தில் விரிந்து செல்லும் அனுபவ நூதனங்களில் திசைகளைத் தொலைத்து  திருப்தி இழந்து வரும் மனிதர்களின்  வாழ்வுக்கு ஒரு புத்தி ஜீவிகளின் தாகத்தைப்  போல தாரிக்கா ஒரு  தாகத்தில் தவிப்பதை   "மனங்களின் ஊசல்கள்" மறு பதிப்புச்  செய்கிறது .
படைப்பிலக்கியம்  மனித  வாழ்க்கைக்கு பயனளிப்பதாய்  இருக்க வேண்டும்  என்ற நம்பிக்கையோடு தாரிக்கா எழுதுவதை அவரது  சிந்தனை யோட்டத்திலிருந்து  தெரிந்து  கொள்ள முடிகிறது.இந்த  உலகத்தின் எந்த ஒரு
மூலையிலாவது அடையாளம்  தெரியாத  யாரவது  சிலராவது  தாரிக்காவின்   மனங்களின் ஊசல்களால் மறு  பிறவி  எடுக்கக்  கூடும் என்ற  நம்பிக்கை  எனக்கு  இருக்கிறது .
இலங்கையின்  ஒரு  கரையோரத்தில் யாரும் அறியாத ஒரு மூலையில்  இருந்து கொண்டு  மானிட நேயத்தின்  உந்துததால் போதனைக்கென்று புறப்பட்டிருக்கும்  இந்தப்  பெண்ணின் மீது பிரியமே  அதிகரிக்கின்றது. உலகத்தைச் சுற்றிச்  சிறகடித்துப்  பறந்து உயிர்களின் அவஸ்தைகளோடு  உறவாடும் சந்தர்ப்பங்கள்  தாரிக்காவுக்கு சுதந்திரமாக்கப் பட்டிருப்பதால் நாடு போற்றும் ஒரு  சிந்தனைப் பெண்  போராளியை  நாம் தரிசிக்க  முடியும்.
    
சிந்தனை வட்டத்தின் (215) ஆவது வெளியீடாக "மனங்களின் ஊசல்கள்"கட்டுரைத் தொகுதி  வெளியாகி உள்ளது. இதில்  மொத்தம் (55) கட்டுரைகள்  உள்ளன.கடமையற்றவனுக்கு  உரிமை  இல்லை , பிரச்சினைகளில் நாம் ,அனுபவமே அறிவு, வீர்வாகி நீங்களே வேண்டாமே ,பொறாமை,அவசர  யுகம்,வெற்றின் இரகசியம் , யோசனைகளை கூர்மையாக்கும் விமர்சனங்கங்கள் ,முயற்சியே முதற்படி ,வெற்றி ஒரு பாடத்திட்டம் ,நீங்களும் தலைவராகலாம் ,ஊனமுற்ற சிறுவர்கள் ,வாழ்க்கை  வாழ்வதற்கே ,குடும்பப் பிரச்சினைகளின் தீர்வு இதுதான்
ஆசிரியர்களின் தவறு ,மனங்களிடையே நட்புறவு ,தாயின் தவறு,  விவகாரத்தின் விபரீதம் ,நான் என்கின்ற மையம் ,தொழில் ஒரு தூக்குக் கயிறாய் ,சிறகை விரித்ததால் சிகரம் தொடலாம் ,வீட்டுப் பிரச்சினைக்கு  மருந்து வீட்டுக்குள்ளேயே ,பிள்ளைகளை துன்புறுத்தும் தாய் , ஏழைகளுக்கு உதவுங்கள் , முதுமை,இல்லறத்தில்அமைதி நிலை,திருமணம் பெற்றோர் சம்மதம்  தேவையா,வார்த்தைகளிலே வாழ்க்கை,நன்றி சொல்ல வேண்டும், திறமை புறக்கடிக்கப்படுகிறதா ?, இன்றைய
இளைஞர்கள்,படிப்பே பாரமா ?, வாழ நினைத்தால் வாழலாம் ,கசப்பாகி துப்பி  வீசுங்கள் ,தப்பு ஏன் ,எங்கே தேடுகிறீர்கள் ,விதியை நம்பாதீர்கள் , மனம் விட்டுப் பேசுங்கள் ,காலம் கடந்த கை சேதம் ,வாழ்க்கைக்கு ஒரு ஏவுகனை ,வேலை செய்யும் பெண்களின் பிரச்சினைகள் ,தோல்விகளுக்கு நியாயம் இல்லை ,நாம் நமக்குள் முழுமையானால் ,வாழ்க்கை என்பது , அந்த நாள்  ஞாபகம்,ஆசை அலை போல, மன்னிப்பும் மருந்தாகும் ,மன நிம்மதிக்கு என்ன விலை,ஆளுமை இன்றேல் தாழ்மை தான் ?,படித்தால் மட்டும் போதுமா ?,யார் பரிபூரணவாதி ,மாசற்ற  மனமே ,பலமும் பல வீனமும் ,அன்பான பேச்சு ,பெறோரின் நலன் பேணல்  போன்ற தலைப்புக்களில்  கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நூலை வெளியிட  ஊக்கத்தை ஏற்படுத்தியதுடன்  இந்த  நூல்வெளிவர  காரணமாயிருந்த  அன்புச் சகோதரி ஹிதாயாவை குளிர்ந்த மனதோடு  நினைவு  கூருகின்றார்.
பூமிக்கடியில் ஈரம் இருக்கின்ற இடமெல்லாம் தன் வேர் விரல்களை நீட்டும் 
அடிமரம்  போல் தாரிக்காவின் சிந்தனைகளும்  நீண்டு செல்ல தூய   மனதோடு வாழ்த்துகின்றேன் ..
நூலாசிரியருடனான சகல் தொடர்புகளுக்கும், 
 mrs .tharika marzook
no .32/2,lake side estate,
kurnagala.srilanka .

1 கருத்து:

  1. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
    இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
    தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு