சனி, 24 டிசம்பர், 2011

நூல் ஆய்வு

 

நூல் : மலரும் மொட்டுக்கள்  
ஆசிரியர் : உ .நிசார்
நூல் ஆய்வு: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

 ' நல்ல கவிதைகள் சமுதாயத்தின் சிறந்த வழி 'அந்த வகையில் இன்றைய காலத்தின் தேவையாக இளஞ் சிறார்கள் நெறிப்படுத்தும் வழி காட்டியாக கவிதைகள் அமைவது அவசியம் .
கவிஞர் உ .நிசார் அவர்களின் இக் கவிதைத் தொகுதி அதற்க்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக அமைகிறது
இன் நூலில் மலரும் மொட்டுக்கள் என்ற கவிதையோடு பதினெட்டுக் கவி மொட்டுக்கள் மலர்ந்து மணம்  பரப்பி
அழகு காட்டி நிற்கின்றன .
இன்றைய மொட்டுக்கள் நாளையமலர்கள் என்பது போல ,இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற கருத்தை முதல் கவிதையூடாக ஆசிரியர் விளக்கிச் செல்கிறார்
மேலும் இக் கவிதைத்  தொகுதியில் என்னை வெகுவாகக்
கவர்ந்த்த பாடலாக'உழைத்து  உண்ணப் பழகு 'அமைந்த்துள்ளது இப்பாடல் தாங்கி வரும் ஒவ்வொரு வரியும்
ஒளி வீ சும்முத்துக்களாக அமைந்த்துள்ளது

அக் கவிதையின் சில வரிகள்
உண்மை உரைக்கப் பழகு
       ஊரார் மதிக்கப்  பழகு
நன்மை செய்யப் பழகு
       நாவை பேணப் பழகு

ஒற்றுமை ஓங்கப் பழகு
      உறவை வளர்க்கப் பழகு
வெற்றி கொள்ளப் பழகு
     வேற்றுமை  தவிர்க்கப் பழகு
இன்னும் ஒரு கவிதையில்

குழந்தாய் குழந்தாய்  கதை கேளு
கொஞ்சும் தமிழில் கதை கேளு
விழுந்த ஆப்பிள் பழமொன்றால்
விஞ்ஞானம் வளர்ந்த கதை கேளு

ஐசெக்  நியூற்றன் அன்றொரு நாள்
ஆப்பிள்மரத்தின் நிழலொன்றில்
ஓய்வாய் இருக்க ஆப்பிலொறு
தலையில்  விழுந்த கதை கேளு

இவ்வாறு நல்ல பல ,ஆசிரியாரின் கற்பனையில்  மணம் வீசுகின்றது மலரும் மொட்டுக்கள் வா வெண் புறா கல்வி கற்ப்போம் ,கல்யாணம் ,குட்டி முயலே , காந்தி தாத்தா ,மரங்கள் நடுவோம் ,எங்கள் குடும்பம் ,புகைவண்டி ,தப்பி பாப்பா ,மரங்கள் , ஏற்றமிகு இலங்கை ,இரவு சிரித்தது , உழைத்து உன்னப்  பழகு புவியீர் ப்புவிசை ,இன்று போய் நாளை வா , 
நியாயம் எங்கே ,பந்தடிப்போம் இவ்வாறு தலைப்புக்களில் கவிதைகள் இடம் பெற்று உள்ளன
பதினைந்து  வருடங்களுக்கு மேலாக தரம்   ஐந்தில் கற்பித்தல் பணியில் கவிஞர் ஈடுபட்டதால் சிறுவர்களின்  மனப்பாங்கு , ,சிறப்பாற்றல்கள் ,சொல்வளம் ,கலையுணர்வு ,அனுபவரீதியாக நன்கு உணர எனக்குவாய்ப்பு கிடைத்ததால் தான் சிறுவர்களுக்கான பாடல்களை இயற்றுவதில் தனக்கு பெரிதும் உதவியாக இருந்தததாக ஆசிரியர்  குறிப்பிடுகிறார்
இன் நூலில் எதுகை ,மோனை ,சந்தம் என்பன ஒருங்கே அமைய இயற்றப் பட்டுள்ளதால் சிறுவர்கள் ஓசையுடன் பாடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு .இந்த நூல் இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சினாலும் மத்திய கலாசார நிதியத்தினதும் அனுசரநைலனைல்  அச்சிடப்பட்டுள்ளது
நூலைப் பெற விரும்போவோரும்  ஆசிரியருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர்
உ .நிசார் ,
70/3, புதிய கண்டி  வீதி ,
மாவனல்லை
இலங்கை 
தொலை பேசி .035.2248409.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக